Sunday, December 30, 2007

புது வருட உறுதி மொழி

புது வருட உறுதி மொழி

இந்த வருடமாவது
அதிகாலை எழ வேண்டும்
என்று உறுதி மொழி எடுத்தேன்
எழுந்தேன் 11 மணி அளவில்

இந்த வருடமாவது
பொய் சொல்ல கூடாது
என்று உறுதி மொழி எடுத்தேன்
என் அம்மா கேட்டால் பல் துலக்கிவிட்டு
காபி அருந்தினாயா என்று
ஆம் என்றேன் பல் துலக்காமல்

இந்த வருடமாவது
உயிர்வதை செய்யகூடாது
என்று உறுதி மொழி எடுத்தேன்
மதியவுணவுக்கு மட்டன் பிரியாணி உண்டேன்

இந்த வருடமாவது
நேரத்தை உபயோகமாக பயன்படுத்த வேண்டும்
என்று உறுதி மொழி எடுத்தேன்
மதிய உணவு உண்டுவிட்டு உரங்கியவன்
இரவு உணவுக்குதான் எழுந்தேன்

இந்த வருடமாவது
சீக்கிரம் உறங்க வேண்டும்
என்று உறுதி மொழி எடுத்தேன்
உறங்கினேன் இரவு இரண்டு மணிக்கு

இந்த வருடமாவது
கவிதை எழுத கூடாது
என்று உறுதி மொழி எடுத்தேன்
எழுதினேன் புது வருட உறுதி மொழி

இவை அனைத்திருக்கும் பிறகு
இந்த வருடம் உருதி மொழி எடுக்க கூடாது
என்று உறுதி மொழி எடுத்தேன் (குறிப்பு: இது கூட உறுதி மொழி தான்)


அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி

இரவு கவி

Thursday, December 6, 2007

சூத்திரம்


சூத்திரம்



நீ + நான் = நாம்
என்று இருந்தேன்

நீ + அவன் = அந்நியன்
ஆக்கிவிட்டாய் என்னை.




இரவு கவி
மா. இராமச்சந்திரன்

இடம் கிடைத்தது



இடம் கிடைத்தது


நான் உருவானேன்
அன்னையின் கருவறையில்

அன்னையிடமிருந்து வெளிவந்தேன்
பூமியில்

பூமியில் வலர ஆரம்பித்தேன்
பள்ளியில்

பள்ளியை முடித்தேன்
கல்லூரியில்

கல்லூரியை முடித்தேன்
கம்பெனியில்

கம்பெனியில் இருந்த
உன்னை காதலித்தேன்

இடம் கிடைத்தது
கருவரையில்...


இரவு கவி
மா. இராமச்சந்திரன்

Thursday, November 29, 2007

கண்ணீருக்காக

கண்ணீருக்காக

புகைப்பதை
குடிப்பதை
புலால் உண்பதை
பொய் சொல்வதை
சூதாடுதலை

அனைத்தையும் விட்டேன்
உன் காதலுக்காக

அடி காதலியே
இவை அனைத்தையும் விடுதல்
எளிதென்பதால்
என்னை காதலிக்க
மறுத்து விட்டாய் நீ

இதோ என் உயிரையும் விடுகிறேன்
உன் காதலை தர வேண்டாம்

எனக்காக ஒரு சொட்டு
கண்ணீர் மட்டும் விடுவாயா.........


இரவு கவி
மா.இராமச்சந்திரன்

Sunday, November 11, 2007

மதத்தை அழிக்கத்துடிக்கும் என் தோழா

மதத்தை அழிக்கத்துடிக்கும்
என் தோழா
அதை விரைவில் அழி
இல்லையேல்
என் காதலை அழித்தது போல்
இன்னும் அது எத்தனை
காதலை அழிக்குமோ


இரவு கவி
மா.இராமச்சந்திரன்

மறக்கமுடியவில்லை

அடி காதலியே
இறக்கும் தருவாயில் கூட
காதலை சொல்லாமல் சென்று விட்டாயே
காதலை சொல்லீயிருந்தால்
உன்னை சில காலங்களுக்கு பிறகு
மறந்து விடுவேனென்றா.....

இரவு கவி
மா.இராமச்சந்திரன்

இனிய தமிழர்களுக்கு


Saturday, November 3, 2007

தாமதம்

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நான் என்னுள் தோன்றிய கவிதையை உங்கள் முன் சமர்பிக்கிறேன்
அதில் ஏதும் குறை, நிறை, ஆலோசனைகள் இருந்தால் எனக்கு தயவுசெய்து தெரியபடுத்தவும்.

இரவு கவிஞன்
இராமச்சந்திரன்.