Tuesday, September 23, 2008

"Myyy.. Myyyy name is" To "I'm " ..

ஆபீஸ்ல கொஞ்ச நேரம் வேலையில்லாம இருந்தேன். சரி என்னடா பண்ணலாம்னு யோசிச்சா டங்குன்னு ஒரு 100watts பல்பு என்னோட மண்டைல எரிந்தது.
அது வேறு ஒன்னும் இல்லைங்க கதை எழுதுறதுதான்.

அட நம்ம கதைய யாருடா படிப்பாங்க அப்படின்னு நெனச்சு முடிகறதுக்குள்ள மனசாச்சி சொல்லுச்சு நல்லவங்க, வல்லவங்க, அறிவாளிங்க , புத்திசாலிங்க எல்லாம் தமிழ்மணத்துல இருக்குறாங்க அவங்கள போய் மறந்துடியேடா.

நீ நல்லாவே எழுதுனைனாலும் இவன் ஏதோ try பண்ணுறான் இவன் ரொம்ப நல்லவண்டானு சொல்லுவாங்கனு சொல்லுச்சு. சரின்னு கடவுள் மேல பாரத்த sorry தமிழ் மணத்து மேல பாரத்த போட்டு ஆரம்பிச்சிட்டேன்

கதை ஆரம்பம் ஆகிவிட்டது.........


தன் கல்லூரி வாழ்கை முடிந்து முதன் முதலாக அலுவலகத்திற்கு தயங்கிக்கொண்டே செல்கிறான். அவன் தயக்கத்திற்கு காரணம் அவனுடைய குறைந்த ஆங்கில அறிவு.
இன்று முதுகலை பட்டப்படிப்பே முடித்து இருந்தாலும் தமிழ்நாட்டில் பலரின் நிலைமை இதுதான்.

அவன் தயக்கத்திற்கு இன்னொரு காரணம் அவன் இதுவரை எந்த பெண்ணிடமும் பேசியதில்லை. அதற்க்கு வேறு காரணம் இருந்தாலும் அவனது மனதில் நின்றது அவனுடைய நண்பர்கள் கூறியது மட்டும் தான் டேய் மச்சி பொண்ணுங்க எல்லாம் பயங்கரமா ஆங்கிலத்தில் பேசுவாங்கட நீயும் பேசணும் இல்லாடி யாரும் உன்னை
மதிக்காம படு கேவலமாக பார்பாங்க டா.அதை கேட்டதிலிருந்து அவனுக்கு எந்த பெண்ணை
பார்த்தாலும் அது தான் முதலில் நியாபகத்துக்கு வரும்.

அவன் அலுவலக வரவேற்பறையில் அமர்ந்து இருக்கும் பொழுது அவனக்கு அருகில் ஒரு பெண் வந்து அமர்ந்தாள் . அவளை பார்த்தவுடனே தெரிந்து விடும் அவள் ஒரு பீட்டர் அக்கா
என்று.அதுவும் அழகாக வேறு இருந்தால்.அவனுடைய மனதில் சிறு குழப்பம் எங்கே இவள் நம்மிடம் பேசிவிடுவாளோ என்று அவன் நினைத்து முடிக்கும் முன் Hi, I'm Rosi. Wats ur name ? என்றால் அதை கேட்ட அவனுக்கு உடம்பெல்லாம் வியர்க்க ஆரம்பித்து விட்டது.
யாராவது திடிரென்று ஆங்கிலத்தில் பேசினால் அவனுக்கு பதில் சொல்ல வராது. பலமுறை மனதில் சொல்லிவிட்டு தான் அவன் பேசுவான். வெகு நேரம் கழித்து Myyyy..Myy nameeee is Ashok என்றான். அடுத்த கேள்வி மின்னல் வேகத்தில் அவளிடம் இருந்து
அவன் தலையில் விழுந்தது I'm new joinee. what about you ? என்றாள்.
இதற்கும் சில நேரம் கழித்து yeahh என்றான். அவள் அவனது பதிலை கவனிக்கும் முன் ஏதோ
போன் கால் வர Excuse me என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டாள். அவனுக்கு அப்பாட என்று இருந்தது. அதற்குள் உள்ளிருந்து வந்த ஒருவர் இவனை கூப்பிட்டு Hi, I'm Rajesh, Project Manager. We are allocating you in this project என்று சொல்லிவிட்டு டீம்ல இருக்குற எல்லாத்தையும் introduce பண்ணிவைத்தார். அந்த டீம்ல எல்லாருமே பசங்கதான் இருந்தாங்க. அதை பார்த்த அவனுக்கு மிக பெரிய சந்தோசம். அவன் சந்தோசம் நிலைக்கும் முன் அதே மேனேஜர் அதே பெண்ணை கூட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.
Miss.Rosi, This is your new team என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது நம்ம herovukku கரண்ட் சாக் வச்ச மாதிரி அதாங்க சிவாஜி படத்துல கடைசி scene ல
ரஜினி தனுக்குத்தானே சாக் வச்சுக்குவாறே அது மாதிரி இருந்தது. அதுவும் அவள் ஒவோருவரிடமுமும் கை குலுக்கல் முறையில் introduce ஆகிக்கொண்டு
இருந்தால். அவள் இவனை நெருங்க நெருங்க அவனுடைய கை, கால்கள் எல்லாம் வியர்க்க ஆரம்பித்தன. Ashok கை குலுக்கினான? இல்லையா ?.

தொடரும்...


இப்போதான் எழுத ஆரம்பிச்சுருக்கான் அதுக்குள்ள தொடர் கதை எழுதுறானே
என்பது என் காதில விழுகுது.Sorry எழுதிகிட்டு இருக்கும் போது எங்க PM கூப்பிட்டு
வேலை குடுத்துட்டாரு. அதுனால இப்படி ஒரு trick use பண்ணிகிட்டேன் . :-)
சொல்லவே வேண்டியதில்லை எப்படியும் திட்ட போறீங்க அத அப்படியே பின்னூடமா போடீங்கன நானும் படுச்சு பார்த்துக்குவேன். அத படுச்சு பார்த்துட்டு
கதை எழுதுறது நிப்பாட்டிருவேனு நினைச்சிங்கன அது உங்க தப்பு.
வேணா என்னோட ப்லோக்க(blog) block list ல போட்டு வச்சுக்கோங்க :-) ...

நன்றி
இரவு கவி

Friday, September 12, 2008

பிட் மெகா போட்டிக்கு

முதல் படத்தை பிட் மெகா போட்டிக்கு என்னுடைய சார்பாக அனுப்புகிறேன்

படம் 1




நான் எடுத்த மற்ற பிட் மெகா போட்டி படங்கள் .
நீங்கள் ஏதாவது கருத்து கூறவிரும்பினால் தயவு செய்து பின்னூடத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்

படம் 2



படம் 3



படம் 4



படம் 5



படம் 6



படம் 7



படம் 8




இரவு கவி