Tuesday, August 26, 2008

புள்ளி விபரம்



ஒரு வரிசைக்கு ஐந்து புள்ளிகள்,
ஒரு காலத்துக்கு ஐந்து புள்ளிகள் வீதம்
மொத்தம் 25 புள்ளிகள் இருக்கு.

எப்படி நம்ம புள்ளி விபரம்.
எங்க ஆத்தா அப்போவே சொல்லும் இவன் பெரிய அறிவாளியா வருவண்டானு
வந்துடோம்ல !

இந்த பதிவு மட்டும் சூடான இடுகைல வரல அப்புறம் நானும் "விடை பெறுகிறேன்" என்று பதிவு எழுதுவேன்.

குறிப்பு: இவன் விடை பெற்றா என்ன வடை பெற்றா என்ன அப்படின்னு எல்லாம் இருந்துடுவீங்க அப்படின்னு எனக்கு நல்லாவே தெரியும். அதுனால மூச்சு தவறி கூட அப்படி ஒரு பதிவு போட மாட்டேனே.

Wednesday, August 20, 2008

மல்யுத்தத்தில் சுசில்குமார் சாதனை:

மல்யுத்தத்தில் சுசில்குமார் இந்தியாவுக்கா வெண்கலப்பதக்கம் வென்று கொடுத்துள்ளார் .

அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

Tuesday, August 12, 2008

இராம் புகைப்பட பக்கம்

மன்னித்து கொள்ளவும்: தவறுதலாக இதற்க்கு முந்தைய பதிவை அழித்துவிட்டேன். அதனால் மறுபடியும் போஸ்ட் செய்கிறேன்.

அந்த பதிவுக்கான லிங்க் இங்கே.

இதில் ஏதேனும் லிங்க் ஐ கிளிக் செய்தால் என்னுடைய பதிவுக்கு நீங்கள் செல்லலாம்

இராம் புகைப்பட பக்கம்

அல்லது

இராம் புகைப்பட பக்கம்

Sorry for the trouble.

நன்றி
இரவு கவி

என்னுடைய போட்டோ பக்கம் (My New Blog For Photos)

மன்னித்து கொள்ளவும்: தவறுதலாக என்னுடைய முதல் போஸ்ட் அழித்துவிட்டேன். அதனால் மருபடயும் போஸ்ட் செய்கிறேன்.

நான் எடுத்த புகைபடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு இராம் புகைப்பட பக்கம்
Blog ஆரம்பித்துள்ளேன். நான் எடுத்த சில பூக்களின் புகைபடத்தை உங்கள் முன் வைக்கிறேன். இதில் உங்கள் குறை, நிறைகளை சொல்லி என்னை ஊக்கப்படுத்து மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

என்னை புகை படம் எடுக்க தூண்டிய பிட்(PIT) புகைப்பட குழுவினருக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

கீழ் உள்ள link ஐ கிளிக் செய்தால் அது உங்களை என்னுடைய புது Blog அழைத்து செல்லும்.

இராம் புகைப்பட பக்கம்

நன்றி
இரவு கவி

Monday, August 11, 2008

பென்ச் வாழ்கை....

பென்ச் வாழ்கை....

" அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
அதனினும் அரிது கூன், குருடு, செவிடு இன்றி பிறத்தல் அரிது
.
.
.
.
.
.
.
அதனினும் அரிது மென்பொருள் துறையன்றி வேறு துறையில் வேலை கிடைத்தால் அரிது

அதனினும் அரிது மென்பொருள் துறையில் வேலை கிடைத்தபின் பென்ச்சில்(bench) இல்லாமல் இருத்தல் அரிது ".......


ஆமாங்க ஆன்சைட்ல இருந்து வந்ததுக்கு அப்புறம் என்னை பெஞ்ச்ல போட்டுடாங்க ((அப்பாடி ஒரு வழியா நான் ஆன்சைட்ல இருந்து வந்தத சொல்லியாச்சுடா :-))).
மொத ரெண்டு - மூணு நாலு சும்மா ராஜா வாழ்கை மாதிரி நல்லா தாங்க இருந்தது. போக போக உரலு தேஞ்சு அம்மி ஆன கதை ஆக்கிடுச்சு. ஆமாங்க இது எல்லாம் ஒரு பொலப்பானு
ஆகிடுச்சுங்க.

காலில ஒன்பது மணிக்கு ஆபீஸ் வரணும். அதுக்கு அப்புறம் எட்டு மணி நேரம் ஆபீஸ்ல கம்பீயூட்டர், எந்த வேலையும் இல்லாம சும்மா எத்தனை மணி வரைக்கும் கான்டீன் போறதும், வாரதுமா இருக்குறது. என்னடா எதாவது வேலை குடுங்கடானு சொன்ன உங்களுக்கு அடுத்த வாரம் கிளையன்ட் நேர்காணல் இருக்குன்னு சொல்லுரானுன்களே ஒழிய ஒன்னையும் காணாம் (என்னடா இவனே போய் வேலை கேக்குறன் ரொம்ப நல்லவனா இருப்பான் போல தப்பு கணக்கு போட்டுராதீங்க சும்மா உங்காந்து டைம் பாஸ் பண்ண முடியலை அது தான் போய் வேலை கேக்குறங்க. :-) ).

சரி சும்மா உக்காராம ஏதோ தெருஞ்ச ரெண்டு பேருகூட பேசலாம்னா, அவனுங்க என்னடானா வார்த்தைக்கு ஒரு தடவ கியா ரேய், ஆப் கேசைகே (இது தான் என்னக்கு தெருஞ்ச ஹிந்தி வார்த்தைகள். நாங்க தான் முதல்வர் கலைஞர் சொன்னாருன்னு தமிழ் வளர்த்துகிட்டு இருக்குறோம்ல அதுனால ஹிந்தி படிக்கலை. :-)) அப்படின்னு ஹிந்திலே பேசி உயிர வாங்குறாங்க.

அப்போ அப்போ தெருஞ்சவங்க computer la உக்காந்து தமிழ்மணம், ஜிமெயில் படிச்சு டைம் பாஸ் பண்ணிக்கிட்டு இருக்குறேங்க. இப்படியே இன்னொரு மாசம் போச்சுனா நம்ம படங்கள வர திருப்பு முனை மாதிரி ஒரு நாள் ஒரு மின்னஞ்சல என்னோட resignation லெட்டர் அனுப்பிச்சிட்டு அப்படியே சென்னை பக்கம் போயிருவேன்னு நெனைக்கிறேன் (தையவு செய்து இத யாரும் எங்க மேனேஜர் கிட்ட சொல்லிராதீங்க :-).)

அதுவரைக்கும் இந்த பெஞ்ச்ஜோட மல்லுக்கட்ட வேண்டியதுதான்.

இதுக்கு ஒரு முடிவு காலமே கிடையாதா ?

இப்படிக்கு
பெஞ்ச்ஜோட மல்லுகட்டும்
இரவு கவி

Friday, August 8, 2008

ஆன்சைட் (onsite)

இது எனக்கு forward வந்த மெயில். ஆனா ரொம்ப நல்லா இருக்கு.
இது கொஞ்சம் பெரிய மெயில் ஆனா நல்லா இருக்கு. இத படிச்சதுக்கு அப்புறம் உங்களோட ஆன்சைட் பயணம் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்களேன்.

நான் எல்லாம் போறப்ப யாரும் வந்து என்ன வழி அனுப்பி வைக்கலை. நானே போய் விமானத்துல எடம் பிடுச்சு ஒரு வழியா போய் சேர்த்தேன். ஆனா என்னோட நண்பன் ஒருத்தன் சொன்னான் அவன் போகும்போது அவனுக்கு பூ மாலை போட்டு, ஆரத்தி எல்லாம் எடுத்தாங்களாம்.

குறிப்பு: தயவுசெய்து இமேஜ் பெரிது பண்ணி படிக்கவும். sorry for the inconvenience.












Wednesday, August 6, 2008

நானும் நான் சந்திக்கும் ஆட்டோ ஓட்டுனர்களும்....

நானும் நான் சந்திக்கும் ஆட்டோ ஓட்டுனர்களும்....


அது என்னமோ தெரியலைங்க எனக்கும் ஆட்டோ காரங்களுக்கும் அவ்வளவு பொருத்தம்.என்ன பார்த்தா அவங்க எப்படி தான் "இவன் ரொம்ப நல்லவன் எவ்வளவு கேட்டாலும் குடுப்பானு " கண்டு புடிப்பங்களோ தெரியல. நான் ஒரு சாதுவான பிராணிங்க. யாருகுடையும் அவோளவு சீக்கிரமா பேசிட மாட்டேன். (ஆனா பேச ஆரம்பிச்சிட்டேன் அவ்வளவுதான் அவங்க தொளஞ்சாங்க :-).) இது ஆட்டோகாரங்களுக்கு ரொம்ப நல்லதா போச்சு. எப்பயுமே ஆட்டோல ஏறுரப்ப ஒரு ரேட் சொல்லுவாங்க அப்புறம் இறங்கும் பொழுது ஒரு ரேட் கேப்பாங்க. இந்த அட்டோகராங்க கூட மல்லுக்கட்டுன ரெண்டு மூணு சம்பவத்த சொல்லுறேன் கேளுங்க. கேட்டுட்டு எனக்காக கொஞ்சம் வருத்த படுவீங்கனு நெனைக்கிறேன்.


சம்பவம் 1:

ஒரு கிராமத்து பய்யன்(நான் தாங்க) ஹிந்தில ஒரு வார்த்தை கூட தெரியாம முதன் முதலா மும்பைக்கு என்னோட நண்பன் ஒருத்தன பார்க்க போனேன். எனக்கு மும்பை போறதுல ஒரு சந்தோசம் ஏனா அங்க ஆட்டோல எல்லாம் மீட்டர் தான் பயன்படுதுவாங்கனு கேள்விபட்டேன். சரி பஸ்ஸ்டாண்டு போனவுடனே என் நண்பன் கிட்ட போன்போட்டு எப்படிடா வருனும்னேன். அவன் ஒரு அட்ரஸ் சொல்லி அத ஆட்டோல சொல்லு அவங்க கொண்டு வந்து விட்டுவாங்க சொல்லிடு டேய் அங்க இருந்து இங்க வர 30 ரூபாய் ஆகும்னு ஏன் கிட்ட சொன்னான். சரின்னு ஒரு ஆட்டோ காரன்கிட்ட இங்க போகணும் அப்படின்னு இங்கிலீஷ் தான் சொன்னேன் அவனுக்கு என்னத்த புருஞ்சதோ மண்டைய ஆடிட்டு ஓகே அப்படினான். அவன் நான் சொன்ன எடத்துல என்னை இறக்கி விட்டுட்டு 80 ரூபாய் கேட்டான் அப்ப நெனச்சேன் இதுக்கு நம்ம சென்னையே எவ்வளவோ தேவலைன்னு. நான் எவரம் புரியாம அண்ணா மீட்டர் கொஞ்சம் பார்த்து சொல்லுங்கன்னு அவன்கிட்ட சொல்ல அவன் ஒரு ஸ்லிப் எடுத்து இங்க பாருங்க இதுல என்னா ரேட் போட்டுருக்குனு என்னா பார்க்க சொன்னான். ஆமாங்க அதுல 80 ரூபாய் தான் போட்டிருந்தது. அதுக்குள்ளா என்னோட உயிர் நண்பன் வந்துடான். இப்போ பாருடா அப்படின்னு நெனச்சுகிட்டு என் நண்பன பார்த்து சிரிச்சேன். இதுல என்னா கொடுமைனா அவனுக்கும் ஹிந்தி தெரியாது :-). நாங்க கடைசியா போராடி என்னா காரணம்னு கேட்ட இது பெட்ரோல் ஆட்டோவாம். மும்பைல பெட்ரோல் ஆட்டோ, காஸ் ஆட்டோன்னு ரெண்டு இருக்குறது அப்போதான் என் நண்பனுக்கே தெரிஞ்சது. சரின்னு அவன்கிட்ட காச குடுத்துட்டு வந்தேனுங்க வேற வழிஇல்லமா.
அப்போதான் அவன் சிரிச்ச சிரிப்புக்கு அர்த்தம் புருஞ்சது.

டிஸ்கி: மும்பைல யாரும் பெட்ரோல் ஆட்டோ எற மாட்டங்களாம்.

சம்பவம் 2:

இப்போ என்னா பண்றோம் மும்பைல இறந்து அடுத்த சீன் நம்ம சென்னைக்கு மாத்துறோம். நான் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தப்ப நங்க நல்லூர்ல இருந்த எங்க அக்கா வீட்டுக்கு போலாம்னு ஏர்போர்ட்ல ஆட்டோ கேட்டா அவன் 200 ரூபாய் கேட்டான். ஏர்போர்ட்ல இருந்து எங்க அக்கா வீட்டுக்கு ஒரு 1.5km தான் இருக்கும்.ஆனாலும் நான் சரின்னு சொல்லிட்டேன். அவன் என்னடணா அங்க வந்ததுக்கு அப்புறம் சார் 300 ரூபாய் குடுங்க அப்படினான். அட பாவி ஏண்டானு கேட்டா அவன் சொன்னான் சார் நீங்க விமானத்துல வந்துருக்குறீங்க அதுனால கொடுங்க அப்படினான். அட பாவி டேய் இது எல்லாம் கொஞ்சம் ஓவருடனு சொல்லி அவன் கிட்ட மல்லுகட்டி கடைசியா 250 ரூபாய் குடுத்தேன். அதுக்குள்ளே என்ன ஏர்போர்ட்ல இருந்து கூப்பிட போன எங்க அக்கா அவங்க கார்ல திரும்பி வீட்டுக்கே வந்துடாங்க.

டிஸ்கி: என்னடா இவன் அக்கா கார்ல கூப்பிட வந்துருக்காங்க இவன் ஏன்டா ஆட்டோல வந்தனு யாராவது கேப்பிங்க. அது ஒரு பெரிய கதை அத ஒரு தனி பதிவா போடுறேன்.

இது மாதிரி ஏக பட்டது இருக்குங்க. என் நண்பர்கள்கிட்ட நான் ஆடோல வந்தேன்னு சொன்னா அவங்க மொத கேட்க்கிற கேள்வி இன்னைக்கு எவ்ளோடா அலுதனு கேப்பாங்க.

யாராவது ஒருத்தர் இந்த மாதிரி ஆட்டோ காரங்ககிட்ட இருந்து தப்பிப்பது எப்படின்னு நல்ல ஐடியா குடுதீங்கனா உங்களுக்கு தல நாள்ல ஆம்புள பிள்ளையா புறக்கும்முங்க :-)