Thursday, January 21, 2010
Thursday, January 7, 2010
San Fransisco trip photos......
Monday, January 19, 2009
Wednesday, November 26, 2008
Monday, October 13, 2008
ஏன் என் நண்பன் திட்டுனானு தெரியலைங்க நீங்கலாவது சொல்லுங்க
என்னோட நண்பன் ஒருத்தன் வர சனிக்கிழமை சென்னை பேரனாம். அவன் வந்து எங்க மேனேசுருகிட்ட "I'm flying to chennai on coming saturday." அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தான். அவன் வந்ததுக்கு அப்புறம் அவன் கிட்ட கேட்டேன் ஏன்டா flight ல போறதுனால flying னு சொன்ன அது bus ல போனின "i'm buying to chennai on coming staturday" னு சொல்லுவியா இல்ல train ல போனா "I'm training to chennai on coming staturday" னு சொல்லுவியானு கேட்டேனுங்க அதுக்கு அவனுக்கு தெரிஞ்ச கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லி என்னை திட்டிடாங்க. நீங்களே சொல்லுங்க நான் கேட்டதுள்ள எதாவது தப்பு இருக்கானு :-(
இரவு கவி
இரவு கவி
Wednesday, October 1, 2008
பெண்
பெண்
பெண்ணே காரணம்
அன்புக்கும்
ஆத்திரத்திற்கும்....
பெண்ணே காரணம்
மரியாதைக்கும்
அவமரியாதைக்கும்....
பெண்ணே காரணம்
சாதனைக்கும்
சோதனைக்கும்....
பெண்ணே காரணம்
காதலுக்கும்
அதன் தோல்விக்கும்....
பெண்ணே காரணம்
கருவறைக்கும்
கல்லறைக்கும்....
இரவு கவி
பெண்ணே காரணம்
அன்புக்கும்
ஆத்திரத்திற்கும்....
பெண்ணே காரணம்
மரியாதைக்கும்
அவமரியாதைக்கும்....
பெண்ணே காரணம்
சாதனைக்கும்
சோதனைக்கும்....
பெண்ணே காரணம்
காதலுக்கும்
அதன் தோல்விக்கும்....
பெண்ணே காரணம்
கருவறைக்கும்
கல்லறைக்கும்....
இரவு கவி
Tuesday, September 23, 2008
"Myyy.. Myyyy name is" To "I'm " ..
ஆபீஸ்ல கொஞ்ச நேரம் வேலையில்லாம இருந்தேன். சரி என்னடா பண்ணலாம்னு யோசிச்சா டங்குன்னு ஒரு 100watts பல்பு என்னோட மண்டைல எரிந்தது.
அது வேறு ஒன்னும் இல்லைங்க கதை எழுதுறதுதான்.
அட நம்ம கதைய யாருடா படிப்பாங்க அப்படின்னு நெனச்சு முடிகறதுக்குள்ள மனசாச்சி சொல்லுச்சு நல்லவங்க, வல்லவங்க, அறிவாளிங்க , புத்திசாலிங்க எல்லாம் தமிழ்மணத்துல இருக்குறாங்க அவங்கள போய் மறந்துடியேடா.
நீ நல்லாவே எழுதுனைனாலும் இவன் ஏதோ try பண்ணுறான் இவன் ரொம்ப நல்லவண்டானு சொல்லுவாங்கனு சொல்லுச்சு. சரின்னு கடவுள் மேல பாரத்த sorry தமிழ் மணத்து மேல பாரத்த போட்டு ஆரம்பிச்சிட்டேன்
கதை ஆரம்பம் ஆகிவிட்டது.........
தன் கல்லூரி வாழ்கை முடிந்து முதன் முதலாக அலுவலகத்திற்கு தயங்கிக்கொண்டே செல்கிறான். அவன் தயக்கத்திற்கு காரணம் அவனுடைய குறைந்த ஆங்கில அறிவு.
இன்று முதுகலை பட்டப்படிப்பே முடித்து இருந்தாலும் தமிழ்நாட்டில் பலரின் நிலைமை இதுதான்.
அவன் தயக்கத்திற்கு இன்னொரு காரணம் அவன் இதுவரை எந்த பெண்ணிடமும் பேசியதில்லை. அதற்க்கு வேறு காரணம் இருந்தாலும் அவனது மனதில் நின்றது அவனுடைய நண்பர்கள் கூறியது மட்டும் தான் டேய் மச்சி பொண்ணுங்க எல்லாம் பயங்கரமா ஆங்கிலத்தில் பேசுவாங்கட நீயும் பேசணும் இல்லாடி யாரும் உன்னை
மதிக்காம படு கேவலமாக பார்பாங்க டா.அதை கேட்டதிலிருந்து அவனுக்கு எந்த பெண்ணை
பார்த்தாலும் அது தான் முதலில் நியாபகத்துக்கு வரும்.
அவன் அலுவலக வரவேற்பறையில் அமர்ந்து இருக்கும் பொழுது அவனக்கு அருகில் ஒரு பெண் வந்து அமர்ந்தாள் . அவளை பார்த்தவுடனே தெரிந்து விடும் அவள் ஒரு பீட்டர் அக்கா
என்று.அதுவும் அழகாக வேறு இருந்தால்.அவனுடைய மனதில் சிறு குழப்பம் எங்கே இவள் நம்மிடம் பேசிவிடுவாளோ என்று அவன் நினைத்து முடிக்கும் முன் Hi, I'm Rosi. Wats ur name ? என்றால் அதை கேட்ட அவனுக்கு உடம்பெல்லாம் வியர்க்க ஆரம்பித்து விட்டது.
யாராவது திடிரென்று ஆங்கிலத்தில் பேசினால் அவனுக்கு பதில் சொல்ல வராது. பலமுறை மனதில் சொல்லிவிட்டு தான் அவன் பேசுவான். வெகு நேரம் கழித்து Myyyy..Myy nameeee is Ashok என்றான். அடுத்த கேள்வி மின்னல் வேகத்தில் அவளிடம் இருந்து
அவன் தலையில் விழுந்தது I'm new joinee. what about you ? என்றாள்.
இதற்கும் சில நேரம் கழித்து yeahh என்றான். அவள் அவனது பதிலை கவனிக்கும் முன் ஏதோ
போன் கால் வர Excuse me என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டாள். அவனுக்கு அப்பாட என்று இருந்தது. அதற்குள் உள்ளிருந்து வந்த ஒருவர் இவனை கூப்பிட்டு Hi, I'm Rajesh, Project Manager. We are allocating you in this project என்று சொல்லிவிட்டு டீம்ல இருக்குற எல்லாத்தையும் introduce பண்ணிவைத்தார். அந்த டீம்ல எல்லாருமே பசங்கதான் இருந்தாங்க. அதை பார்த்த அவனுக்கு மிக பெரிய சந்தோசம். அவன் சந்தோசம் நிலைக்கும் முன் அதே மேனேஜர் அதே பெண்ணை கூட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.
Miss.Rosi, This is your new team என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது நம்ம herovukku கரண்ட் சாக் வச்ச மாதிரி அதாங்க சிவாஜி படத்துல கடைசி scene ல
ரஜினி தனுக்குத்தானே சாக் வச்சுக்குவாறே அது மாதிரி இருந்தது. அதுவும் அவள் ஒவோருவரிடமுமும் கை குலுக்கல் முறையில் introduce ஆகிக்கொண்டு
இருந்தால். அவள் இவனை நெருங்க நெருங்க அவனுடைய கை, கால்கள் எல்லாம் வியர்க்க ஆரம்பித்தன. Ashok கை குலுக்கினான? இல்லையா ?.
தொடரும்...
இப்போதான் எழுத ஆரம்பிச்சுருக்கான் அதுக்குள்ள தொடர் கதை எழுதுறானே
என்பது என் காதில விழுகுது.Sorry எழுதிகிட்டு இருக்கும் போது எங்க PM கூப்பிட்டு
வேலை குடுத்துட்டாரு. அதுனால இப்படி ஒரு trick use பண்ணிகிட்டேன் . :-)
சொல்லவே வேண்டியதில்லை எப்படியும் திட்ட போறீங்க அத அப்படியே பின்னூடமா போடீங்கன நானும் படுச்சு பார்த்துக்குவேன். அத படுச்சு பார்த்துட்டு
கதை எழுதுறது நிப்பாட்டிருவேனு நினைச்சிங்கன அது உங்க தப்பு.
வேணா என்னோட ப்லோக்க(blog) block list ல போட்டு வச்சுக்கோங்க :-) ...
நன்றி
இரவு கவி
அது வேறு ஒன்னும் இல்லைங்க கதை எழுதுறதுதான்.
அட நம்ம கதைய யாருடா படிப்பாங்க அப்படின்னு நெனச்சு முடிகறதுக்குள்ள மனசாச்சி சொல்லுச்சு நல்லவங்க, வல்லவங்க, அறிவாளிங்க , புத்திசாலிங்க எல்லாம் தமிழ்மணத்துல இருக்குறாங்க அவங்கள போய் மறந்துடியேடா.
நீ நல்லாவே எழுதுனைனாலும் இவன் ஏதோ try பண்ணுறான் இவன் ரொம்ப நல்லவண்டானு சொல்லுவாங்கனு சொல்லுச்சு. சரின்னு கடவுள் மேல பாரத்த sorry தமிழ் மணத்து மேல பாரத்த போட்டு ஆரம்பிச்சிட்டேன்
கதை ஆரம்பம் ஆகிவிட்டது.........
தன் கல்லூரி வாழ்கை முடிந்து முதன் முதலாக அலுவலகத்திற்கு தயங்கிக்கொண்டே செல்கிறான். அவன் தயக்கத்திற்கு காரணம் அவனுடைய குறைந்த ஆங்கில அறிவு.
இன்று முதுகலை பட்டப்படிப்பே முடித்து இருந்தாலும் தமிழ்நாட்டில் பலரின் நிலைமை இதுதான்.
அவன் தயக்கத்திற்கு இன்னொரு காரணம் அவன் இதுவரை எந்த பெண்ணிடமும் பேசியதில்லை. அதற்க்கு வேறு காரணம் இருந்தாலும் அவனது மனதில் நின்றது அவனுடைய நண்பர்கள் கூறியது மட்டும் தான் டேய் மச்சி பொண்ணுங்க எல்லாம் பயங்கரமா ஆங்கிலத்தில் பேசுவாங்கட நீயும் பேசணும் இல்லாடி யாரும் உன்னை
மதிக்காம படு கேவலமாக பார்பாங்க டா.அதை கேட்டதிலிருந்து அவனுக்கு எந்த பெண்ணை
பார்த்தாலும் அது தான் முதலில் நியாபகத்துக்கு வரும்.
அவன் அலுவலக வரவேற்பறையில் அமர்ந்து இருக்கும் பொழுது அவனக்கு அருகில் ஒரு பெண் வந்து அமர்ந்தாள் . அவளை பார்த்தவுடனே தெரிந்து விடும் அவள் ஒரு பீட்டர் அக்கா
என்று.அதுவும் அழகாக வேறு இருந்தால்.அவனுடைய மனதில் சிறு குழப்பம் எங்கே இவள் நம்மிடம் பேசிவிடுவாளோ என்று அவன் நினைத்து முடிக்கும் முன் Hi, I'm Rosi. Wats ur name ? என்றால் அதை கேட்ட அவனுக்கு உடம்பெல்லாம் வியர்க்க ஆரம்பித்து விட்டது.
யாராவது திடிரென்று ஆங்கிலத்தில் பேசினால் அவனுக்கு பதில் சொல்ல வராது. பலமுறை மனதில் சொல்லிவிட்டு தான் அவன் பேசுவான். வெகு நேரம் கழித்து Myyyy..Myy nameeee is Ashok என்றான். அடுத்த கேள்வி மின்னல் வேகத்தில் அவளிடம் இருந்து
அவன் தலையில் விழுந்தது I'm new joinee. what about you ? என்றாள்.
இதற்கும் சில நேரம் கழித்து yeahh என்றான். அவள் அவனது பதிலை கவனிக்கும் முன் ஏதோ
போன் கால் வர Excuse me என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டாள். அவனுக்கு அப்பாட என்று இருந்தது. அதற்குள் உள்ளிருந்து வந்த ஒருவர் இவனை கூப்பிட்டு Hi, I'm Rajesh, Project Manager. We are allocating you in this project என்று சொல்லிவிட்டு டீம்ல இருக்குற எல்லாத்தையும் introduce பண்ணிவைத்தார். அந்த டீம்ல எல்லாருமே பசங்கதான் இருந்தாங்க. அதை பார்த்த அவனுக்கு மிக பெரிய சந்தோசம். அவன் சந்தோசம் நிலைக்கும் முன் அதே மேனேஜர் அதே பெண்ணை கூட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.
Miss.Rosi, This is your new team என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது நம்ம herovukku கரண்ட் சாக் வச்ச மாதிரி அதாங்க சிவாஜி படத்துல கடைசி scene ல
ரஜினி தனுக்குத்தானே சாக் வச்சுக்குவாறே அது மாதிரி இருந்தது. அதுவும் அவள் ஒவோருவரிடமுமும் கை குலுக்கல் முறையில் introduce ஆகிக்கொண்டு
இருந்தால். அவள் இவனை நெருங்க நெருங்க அவனுடைய கை, கால்கள் எல்லாம் வியர்க்க ஆரம்பித்தன. Ashok கை குலுக்கினான? இல்லையா ?.
தொடரும்...
இப்போதான் எழுத ஆரம்பிச்சுருக்கான் அதுக்குள்ள தொடர் கதை எழுதுறானே
என்பது என் காதில விழுகுது.Sorry எழுதிகிட்டு இருக்கும் போது எங்க PM கூப்பிட்டு
வேலை குடுத்துட்டாரு. அதுனால இப்படி ஒரு trick use பண்ணிகிட்டேன் . :-)
சொல்லவே வேண்டியதில்லை எப்படியும் திட்ட போறீங்க அத அப்படியே பின்னூடமா போடீங்கன நானும் படுச்சு பார்த்துக்குவேன். அத படுச்சு பார்த்துட்டு
கதை எழுதுறது நிப்பாட்டிருவேனு நினைச்சிங்கன அது உங்க தப்பு.
வேணா என்னோட ப்லோக்க(blog) block list ல போட்டு வச்சுக்கோங்க :-) ...
நன்றி
இரவு கவி
Friday, September 12, 2008
பிட் மெகா போட்டிக்கு
Tuesday, August 26, 2008
புள்ளி விபரம்

ஒரு வரிசைக்கு ஐந்து புள்ளிகள்,
ஒரு காலத்துக்கு ஐந்து புள்ளிகள் வீதம்
மொத்தம் 25 புள்ளிகள் இருக்கு.
எப்படி நம்ம புள்ளி விபரம்.
எங்க ஆத்தா அப்போவே சொல்லும் இவன் பெரிய அறிவாளியா வருவண்டானு
வந்துடோம்ல !
இந்த பதிவு மட்டும் சூடான இடுகைல வரல அப்புறம் நானும் "விடை பெறுகிறேன்" என்று பதிவு எழுதுவேன்.
குறிப்பு: இவன் விடை பெற்றா என்ன வடை பெற்றா என்ன அப்படின்னு எல்லாம் இருந்துடுவீங்க அப்படின்னு எனக்கு நல்லாவே தெரியும். அதுனால மூச்சு தவறி கூட அப்படி ஒரு பதிவு போட மாட்டேனே.
Wednesday, August 20, 2008
மல்யுத்தத்தில் சுசில்குமார் சாதனை:
மல்யுத்தத்தில் சுசில்குமார் இந்தியாவுக்கா வெண்கலப்பதக்கம் வென்று கொடுத்துள்ளார் .
அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Tuesday, August 12, 2008
இராம் புகைப்பட பக்கம்
மன்னித்து கொள்ளவும்: தவறுதலாக இதற்க்கு முந்தைய பதிவை அழித்துவிட்டேன். அதனால் மறுபடியும் போஸ்ட் செய்கிறேன்.
அந்த பதிவுக்கான லிங்க் இங்கே.
இதில் ஏதேனும் லிங்க் ஐ கிளிக் செய்தால் என்னுடைய பதிவுக்கு நீங்கள் செல்லலாம்
இராம் புகைப்பட பக்கம்
அல்லது
இராம் புகைப்பட பக்கம்
Sorry for the trouble.
நன்றி
இரவு கவி
அந்த பதிவுக்கான லிங்க் இங்கே.
இதில் ஏதேனும் லிங்க் ஐ கிளிக் செய்தால் என்னுடைய பதிவுக்கு நீங்கள் செல்லலாம்
இராம் புகைப்பட பக்கம்
அல்லது
இராம் புகைப்பட பக்கம்
Sorry for the trouble.
நன்றி
இரவு கவி
என்னுடைய போட்டோ பக்கம் (My New Blog For Photos)
மன்னித்து கொள்ளவும்: தவறுதலாக என்னுடைய முதல் போஸ்ட் அழித்துவிட்டேன். அதனால் மருபடயும் போஸ்ட் செய்கிறேன்.
நான் எடுத்த புகைபடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு இராம் புகைப்பட பக்கம்
Blog ஆரம்பித்துள்ளேன். நான் எடுத்த சில பூக்களின் புகைபடத்தை உங்கள் முன் வைக்கிறேன். இதில் உங்கள் குறை, நிறைகளை சொல்லி என்னை ஊக்கப்படுத்து மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
என்னை புகை படம் எடுக்க தூண்டிய பிட்(PIT) புகைப்பட குழுவினருக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
கீழ் உள்ள link ஐ கிளிக் செய்தால் அது உங்களை என்னுடைய புது Blog அழைத்து செல்லும்.
இராம் புகைப்பட பக்கம்
நன்றி
இரவு கவி
நான் எடுத்த புகைபடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு இராம் புகைப்பட பக்கம்
Blog ஆரம்பித்துள்ளேன். நான் எடுத்த சில பூக்களின் புகைபடத்தை உங்கள் முன் வைக்கிறேன். இதில் உங்கள் குறை, நிறைகளை சொல்லி என்னை ஊக்கப்படுத்து மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
என்னை புகை படம் எடுக்க தூண்டிய பிட்(PIT) புகைப்பட குழுவினருக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
கீழ் உள்ள link ஐ கிளிக் செய்தால் அது உங்களை என்னுடைய புது Blog அழைத்து செல்லும்.
இராம் புகைப்பட பக்கம்
நன்றி
இரவு கவி
Monday, August 11, 2008
பென்ச் வாழ்கை....
பென்ச் வாழ்கை....
" அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
அதனினும் அரிது கூன், குருடு, செவிடு இன்றி பிறத்தல் அரிது
.
.
.
.
.
.
.
அதனினும் அரிது மென்பொருள் துறையன்றி வேறு துறையில் வேலை கிடைத்தால் அரிது
அதனினும் அரிது மென்பொருள் துறையில் வேலை கிடைத்தபின் பென்ச்சில்(bench) இல்லாமல் இருத்தல் அரிது ".......
ஆமாங்க ஆன்சைட்ல இருந்து வந்ததுக்கு அப்புறம் என்னை பெஞ்ச்ல போட்டுடாங்க ((அப்பாடி ஒரு வழியா நான் ஆன்சைட்ல இருந்து வந்தத சொல்லியாச்சுடா :-))).
மொத ரெண்டு - மூணு நாலு சும்மா ராஜா வாழ்கை மாதிரி நல்லா தாங்க இருந்தது. போக போக உரலு தேஞ்சு அம்மி ஆன கதை ஆக்கிடுச்சு. ஆமாங்க இது எல்லாம் ஒரு பொலப்பானு
ஆகிடுச்சுங்க.
காலில ஒன்பது மணிக்கு ஆபீஸ் வரணும். அதுக்கு அப்புறம் எட்டு மணி நேரம் ஆபீஸ்ல கம்பீயூட்டர், எந்த வேலையும் இல்லாம சும்மா எத்தனை மணி வரைக்கும் கான்டீன் போறதும், வாரதுமா இருக்குறது. என்னடா எதாவது வேலை குடுங்கடானு சொன்ன உங்களுக்கு அடுத்த வாரம் கிளையன்ட் நேர்காணல் இருக்குன்னு சொல்லுரானுன்களே ஒழிய ஒன்னையும் காணாம் (என்னடா இவனே போய் வேலை கேக்குறன் ரொம்ப நல்லவனா இருப்பான் போல தப்பு கணக்கு போட்டுராதீங்க சும்மா உங்காந்து டைம் பாஸ் பண்ண முடியலை அது தான் போய் வேலை கேக்குறங்க. :-) ).
சரி சும்மா உக்காராம ஏதோ தெருஞ்ச ரெண்டு பேருகூட பேசலாம்னா, அவனுங்க என்னடானா வார்த்தைக்கு ஒரு தடவ கியா ரேய், ஆப் கேசைகே (இது தான் என்னக்கு தெருஞ்ச ஹிந்தி வார்த்தைகள். நாங்க தான் முதல்வர் கலைஞர் சொன்னாருன்னு தமிழ் வளர்த்துகிட்டு இருக்குறோம்ல அதுனால ஹிந்தி படிக்கலை. :-)) அப்படின்னு ஹிந்திலே பேசி உயிர வாங்குறாங்க.
அப்போ அப்போ தெருஞ்சவங்க computer la உக்காந்து தமிழ்மணம், ஜிமெயில் படிச்சு டைம் பாஸ் பண்ணிக்கிட்டு இருக்குறேங்க. இப்படியே இன்னொரு மாசம் போச்சுனா நம்ம படங்கள வர திருப்பு முனை மாதிரி ஒரு நாள் ஒரு மின்னஞ்சல என்னோட resignation லெட்டர் அனுப்பிச்சிட்டு அப்படியே சென்னை பக்கம் போயிருவேன்னு நெனைக்கிறேன் (தையவு செய்து இத யாரும் எங்க மேனேஜர் கிட்ட சொல்லிராதீங்க :-).)
அதுவரைக்கும் இந்த பெஞ்ச்ஜோட மல்லுக்கட்ட வேண்டியதுதான்.
இதுக்கு ஒரு முடிவு காலமே கிடையாதா ?
இப்படிக்கு
பெஞ்ச்ஜோட மல்லுகட்டும்
இரவு கவி
" அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
அதனினும் அரிது கூன், குருடு, செவிடு இன்றி பிறத்தல் அரிது
.
.
.
.
.
.
.
அதனினும் அரிது மென்பொருள் துறையன்றி வேறு துறையில் வேலை கிடைத்தால் அரிது
அதனினும் அரிது மென்பொருள் துறையில் வேலை கிடைத்தபின் பென்ச்சில்(bench) இல்லாமல் இருத்தல் அரிது ".......
ஆமாங்க ஆன்சைட்ல இருந்து வந்ததுக்கு அப்புறம் என்னை பெஞ்ச்ல போட்டுடாங்க ((அப்பாடி ஒரு வழியா நான் ஆன்சைட்ல இருந்து வந்தத சொல்லியாச்சுடா :-))).
மொத ரெண்டு - மூணு நாலு சும்மா ராஜா வாழ்கை மாதிரி நல்லா தாங்க இருந்தது. போக போக உரலு தேஞ்சு அம்மி ஆன கதை ஆக்கிடுச்சு. ஆமாங்க இது எல்லாம் ஒரு பொலப்பானு
ஆகிடுச்சுங்க.
காலில ஒன்பது மணிக்கு ஆபீஸ் வரணும். அதுக்கு அப்புறம் எட்டு மணி நேரம் ஆபீஸ்ல கம்பீயூட்டர், எந்த வேலையும் இல்லாம சும்மா எத்தனை மணி வரைக்கும் கான்டீன் போறதும், வாரதுமா இருக்குறது. என்னடா எதாவது வேலை குடுங்கடானு சொன்ன உங்களுக்கு அடுத்த வாரம் கிளையன்ட் நேர்காணல் இருக்குன்னு சொல்லுரானுன்களே ஒழிய ஒன்னையும் காணாம் (என்னடா இவனே போய் வேலை கேக்குறன் ரொம்ப நல்லவனா இருப்பான் போல தப்பு கணக்கு போட்டுராதீங்க சும்மா உங்காந்து டைம் பாஸ் பண்ண முடியலை அது தான் போய் வேலை கேக்குறங்க. :-) ).
சரி சும்மா உக்காராம ஏதோ தெருஞ்ச ரெண்டு பேருகூட பேசலாம்னா, அவனுங்க என்னடானா வார்த்தைக்கு ஒரு தடவ கியா ரேய், ஆப் கேசைகே (இது தான் என்னக்கு தெருஞ்ச ஹிந்தி வார்த்தைகள். நாங்க தான் முதல்வர் கலைஞர் சொன்னாருன்னு தமிழ் வளர்த்துகிட்டு இருக்குறோம்ல அதுனால ஹிந்தி படிக்கலை. :-)) அப்படின்னு ஹிந்திலே பேசி உயிர வாங்குறாங்க.
அப்போ அப்போ தெருஞ்சவங்க computer la உக்காந்து தமிழ்மணம், ஜிமெயில் படிச்சு டைம் பாஸ் பண்ணிக்கிட்டு இருக்குறேங்க. இப்படியே இன்னொரு மாசம் போச்சுனா நம்ம படங்கள வர திருப்பு முனை மாதிரி ஒரு நாள் ஒரு மின்னஞ்சல என்னோட resignation லெட்டர் அனுப்பிச்சிட்டு அப்படியே சென்னை பக்கம் போயிருவேன்னு நெனைக்கிறேன் (தையவு செய்து இத யாரும் எங்க மேனேஜர் கிட்ட சொல்லிராதீங்க :-).)
அதுவரைக்கும் இந்த பெஞ்ச்ஜோட மல்லுக்கட்ட வேண்டியதுதான்.
இதுக்கு ஒரு முடிவு காலமே கிடையாதா ?
இப்படிக்கு
பெஞ்ச்ஜோட மல்லுகட்டும்
இரவு கவி
Friday, August 8, 2008
ஆன்சைட் (onsite)
இது எனக்கு forward வந்த மெயில். ஆனா ரொம்ப நல்லா இருக்கு.
இது கொஞ்சம் பெரிய மெயில் ஆனா நல்லா இருக்கு. இத படிச்சதுக்கு அப்புறம் உங்களோட ஆன்சைட் பயணம் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்களேன்.
நான் எல்லாம் போறப்ப யாரும் வந்து என்ன வழி அனுப்பி வைக்கலை. நானே போய் விமானத்துல எடம் பிடுச்சு ஒரு வழியா போய் சேர்த்தேன். ஆனா என்னோட நண்பன் ஒருத்தன் சொன்னான் அவன் போகும்போது அவனுக்கு பூ மாலை போட்டு, ஆரத்தி எல்லாம் எடுத்தாங்களாம்.
குறிப்பு: தயவுசெய்து இமேஜ் பெரிது பண்ணி படிக்கவும். sorry for the inconvenience.









இது கொஞ்சம் பெரிய மெயில் ஆனா நல்லா இருக்கு. இத படிச்சதுக்கு அப்புறம் உங்களோட ஆன்சைட் பயணம் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்களேன்.
நான் எல்லாம் போறப்ப யாரும் வந்து என்ன வழி அனுப்பி வைக்கலை. நானே போய் விமானத்துல எடம் பிடுச்சு ஒரு வழியா போய் சேர்த்தேன். ஆனா என்னோட நண்பன் ஒருத்தன் சொன்னான் அவன் போகும்போது அவனுக்கு பூ மாலை போட்டு, ஆரத்தி எல்லாம் எடுத்தாங்களாம்.
குறிப்பு: தயவுசெய்து இமேஜ் பெரிது பண்ணி படிக்கவும். sorry for the inconvenience.









Wednesday, August 6, 2008
நானும் நான் சந்திக்கும் ஆட்டோ ஓட்டுனர்களும்....
நானும் நான் சந்திக்கும் ஆட்டோ ஓட்டுனர்களும்....
அது என்னமோ தெரியலைங்க எனக்கும் ஆட்டோ காரங்களுக்கும் அவ்வளவு பொருத்தம்.என்ன பார்த்தா அவங்க எப்படி தான் "இவன் ரொம்ப நல்லவன் எவ்வளவு கேட்டாலும் குடுப்பானு " கண்டு புடிப்பங்களோ தெரியல. நான் ஒரு சாதுவான பிராணிங்க. யாருகுடையும் அவோளவு சீக்கிரமா பேசிட மாட்டேன். (ஆனா பேச ஆரம்பிச்சிட்டேன் அவ்வளவுதான் அவங்க தொளஞ்சாங்க :-).) இது ஆட்டோகாரங்களுக்கு ரொம்ப நல்லதா போச்சு. எப்பயுமே ஆட்டோல ஏறுரப்ப ஒரு ரேட் சொல்லுவாங்க அப்புறம் இறங்கும் பொழுது ஒரு ரேட் கேப்பாங்க. இந்த அட்டோகராங்க கூட மல்லுக்கட்டுன ரெண்டு மூணு சம்பவத்த சொல்லுறேன் கேளுங்க. கேட்டுட்டு எனக்காக கொஞ்சம் வருத்த படுவீங்கனு நெனைக்கிறேன்.
சம்பவம் 1:
ஒரு கிராமத்து பய்யன்(நான் தாங்க) ஹிந்தில ஒரு வார்த்தை கூட தெரியாம முதன் முதலா மும்பைக்கு என்னோட நண்பன் ஒருத்தன பார்க்க போனேன். எனக்கு மும்பை போறதுல ஒரு சந்தோசம் ஏனா அங்க ஆட்டோல எல்லாம் மீட்டர் தான் பயன்படுதுவாங்கனு கேள்விபட்டேன். சரி பஸ்ஸ்டாண்டு போனவுடனே என் நண்பன் கிட்ட போன்போட்டு எப்படிடா வருனும்னேன். அவன் ஒரு அட்ரஸ் சொல்லி அத ஆட்டோல சொல்லு அவங்க கொண்டு வந்து விட்டுவாங்க சொல்லிடு டேய் அங்க இருந்து இங்க வர 30 ரூபாய் ஆகும்னு ஏன் கிட்ட சொன்னான். சரின்னு ஒரு ஆட்டோ காரன்கிட்ட இங்க போகணும் அப்படின்னு இங்கிலீஷ் தான் சொன்னேன் அவனுக்கு என்னத்த புருஞ்சதோ மண்டைய ஆடிட்டு ஓகே அப்படினான். அவன் நான் சொன்ன எடத்துல என்னை இறக்கி விட்டுட்டு 80 ரூபாய் கேட்டான் அப்ப நெனச்சேன் இதுக்கு நம்ம சென்னையே எவ்வளவோ தேவலைன்னு. நான் எவரம் புரியாம அண்ணா மீட்டர் கொஞ்சம் பார்த்து சொல்லுங்கன்னு அவன்கிட்ட சொல்ல அவன் ஒரு ஸ்லிப் எடுத்து இங்க பாருங்க இதுல என்னா ரேட் போட்டுருக்குனு என்னா பார்க்க சொன்னான். ஆமாங்க அதுல 80 ரூபாய் தான் போட்டிருந்தது. அதுக்குள்ளா என்னோட உயிர் நண்பன் வந்துடான். இப்போ பாருடா அப்படின்னு நெனச்சுகிட்டு என் நண்பன பார்த்து சிரிச்சேன். இதுல என்னா கொடுமைனா அவனுக்கும் ஹிந்தி தெரியாது :-). நாங்க கடைசியா போராடி என்னா காரணம்னு கேட்ட இது பெட்ரோல் ஆட்டோவாம். மும்பைல பெட்ரோல் ஆட்டோ, காஸ் ஆட்டோன்னு ரெண்டு இருக்குறது அப்போதான் என் நண்பனுக்கே தெரிஞ்சது. சரின்னு அவன்கிட்ட காச குடுத்துட்டு வந்தேனுங்க வேற வழிஇல்லமா.
அப்போதான் அவன் சிரிச்ச சிரிப்புக்கு அர்த்தம் புருஞ்சது.
டிஸ்கி: மும்பைல யாரும் பெட்ரோல் ஆட்டோ எற மாட்டங்களாம்.
சம்பவம் 2:
இப்போ என்னா பண்றோம் மும்பைல இறந்து அடுத்த சீன் நம்ம சென்னைக்கு மாத்துறோம். நான் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தப்ப நங்க நல்லூர்ல இருந்த எங்க அக்கா வீட்டுக்கு போலாம்னு ஏர்போர்ட்ல ஆட்டோ கேட்டா அவன் 200 ரூபாய் கேட்டான். ஏர்போர்ட்ல இருந்து எங்க அக்கா வீட்டுக்கு ஒரு 1.5km தான் இருக்கும்.ஆனாலும் நான் சரின்னு சொல்லிட்டேன். அவன் என்னடணா அங்க வந்ததுக்கு அப்புறம் சார் 300 ரூபாய் குடுங்க அப்படினான். அட பாவி ஏண்டானு கேட்டா அவன் சொன்னான் சார் நீங்க விமானத்துல வந்துருக்குறீங்க அதுனால கொடுங்க அப்படினான். அட பாவி டேய் இது எல்லாம் கொஞ்சம் ஓவருடனு சொல்லி அவன் கிட்ட மல்லுகட்டி கடைசியா 250 ரூபாய் குடுத்தேன். அதுக்குள்ளே என்ன ஏர்போர்ட்ல இருந்து கூப்பிட போன எங்க அக்கா அவங்க கார்ல திரும்பி வீட்டுக்கே வந்துடாங்க.
டிஸ்கி: என்னடா இவன் அக்கா கார்ல கூப்பிட வந்துருக்காங்க இவன் ஏன்டா ஆட்டோல வந்தனு யாராவது கேப்பிங்க. அது ஒரு பெரிய கதை அத ஒரு தனி பதிவா போடுறேன்.
இது மாதிரி ஏக பட்டது இருக்குங்க. என் நண்பர்கள்கிட்ட நான் ஆடோல வந்தேன்னு சொன்னா அவங்க மொத கேட்க்கிற கேள்வி இன்னைக்கு எவ்ளோடா அலுதனு கேப்பாங்க.
யாராவது ஒருத்தர் இந்த மாதிரி ஆட்டோ காரங்ககிட்ட இருந்து தப்பிப்பது எப்படின்னு நல்ல ஐடியா குடுதீங்கனா உங்களுக்கு தல நாள்ல ஆம்புள பிள்ளையா புறக்கும்முங்க :-)
அது என்னமோ தெரியலைங்க எனக்கும் ஆட்டோ காரங்களுக்கும் அவ்வளவு பொருத்தம்.என்ன பார்த்தா அவங்க எப்படி தான் "இவன் ரொம்ப நல்லவன் எவ்வளவு கேட்டாலும் குடுப்பானு " கண்டு புடிப்பங்களோ தெரியல. நான் ஒரு சாதுவான பிராணிங்க. யாருகுடையும் அவோளவு சீக்கிரமா பேசிட மாட்டேன். (ஆனா பேச ஆரம்பிச்சிட்டேன் அவ்வளவுதான் அவங்க தொளஞ்சாங்க :-).) இது ஆட்டோகாரங்களுக்கு ரொம்ப நல்லதா போச்சு. எப்பயுமே ஆட்டோல ஏறுரப்ப ஒரு ரேட் சொல்லுவாங்க அப்புறம் இறங்கும் பொழுது ஒரு ரேட் கேப்பாங்க. இந்த அட்டோகராங்க கூட மல்லுக்கட்டுன ரெண்டு மூணு சம்பவத்த சொல்லுறேன் கேளுங்க. கேட்டுட்டு எனக்காக கொஞ்சம் வருத்த படுவீங்கனு நெனைக்கிறேன்.
சம்பவம் 1:
ஒரு கிராமத்து பய்யன்(நான் தாங்க) ஹிந்தில ஒரு வார்த்தை கூட தெரியாம முதன் முதலா மும்பைக்கு என்னோட நண்பன் ஒருத்தன பார்க்க போனேன். எனக்கு மும்பை போறதுல ஒரு சந்தோசம் ஏனா அங்க ஆட்டோல எல்லாம் மீட்டர் தான் பயன்படுதுவாங்கனு கேள்விபட்டேன். சரி பஸ்ஸ்டாண்டு போனவுடனே என் நண்பன் கிட்ட போன்போட்டு எப்படிடா வருனும்னேன். அவன் ஒரு அட்ரஸ் சொல்லி அத ஆட்டோல சொல்லு அவங்க கொண்டு வந்து விட்டுவாங்க சொல்லிடு டேய் அங்க இருந்து இங்க வர 30 ரூபாய் ஆகும்னு ஏன் கிட்ட சொன்னான். சரின்னு ஒரு ஆட்டோ காரன்கிட்ட இங்க போகணும் அப்படின்னு இங்கிலீஷ் தான் சொன்னேன் அவனுக்கு என்னத்த புருஞ்சதோ மண்டைய ஆடிட்டு ஓகே அப்படினான். அவன் நான் சொன்ன எடத்துல என்னை இறக்கி விட்டுட்டு 80 ரூபாய் கேட்டான் அப்ப நெனச்சேன் இதுக்கு நம்ம சென்னையே எவ்வளவோ தேவலைன்னு. நான் எவரம் புரியாம அண்ணா மீட்டர் கொஞ்சம் பார்த்து சொல்லுங்கன்னு அவன்கிட்ட சொல்ல அவன் ஒரு ஸ்லிப் எடுத்து இங்க பாருங்க இதுல என்னா ரேட் போட்டுருக்குனு என்னா பார்க்க சொன்னான். ஆமாங்க அதுல 80 ரூபாய் தான் போட்டிருந்தது. அதுக்குள்ளா என்னோட உயிர் நண்பன் வந்துடான். இப்போ பாருடா அப்படின்னு நெனச்சுகிட்டு என் நண்பன பார்த்து சிரிச்சேன். இதுல என்னா கொடுமைனா அவனுக்கும் ஹிந்தி தெரியாது :-). நாங்க கடைசியா போராடி என்னா காரணம்னு கேட்ட இது பெட்ரோல் ஆட்டோவாம். மும்பைல பெட்ரோல் ஆட்டோ, காஸ் ஆட்டோன்னு ரெண்டு இருக்குறது அப்போதான் என் நண்பனுக்கே தெரிஞ்சது. சரின்னு அவன்கிட்ட காச குடுத்துட்டு வந்தேனுங்க வேற வழிஇல்லமா.
அப்போதான் அவன் சிரிச்ச சிரிப்புக்கு அர்த்தம் புருஞ்சது.
டிஸ்கி: மும்பைல யாரும் பெட்ரோல் ஆட்டோ எற மாட்டங்களாம்.
சம்பவம் 2:
இப்போ என்னா பண்றோம் மும்பைல இறந்து அடுத்த சீன் நம்ம சென்னைக்கு மாத்துறோம். நான் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தப்ப நங்க நல்லூர்ல இருந்த எங்க அக்கா வீட்டுக்கு போலாம்னு ஏர்போர்ட்ல ஆட்டோ கேட்டா அவன் 200 ரூபாய் கேட்டான். ஏர்போர்ட்ல இருந்து எங்க அக்கா வீட்டுக்கு ஒரு 1.5km தான் இருக்கும்.ஆனாலும் நான் சரின்னு சொல்லிட்டேன். அவன் என்னடணா அங்க வந்ததுக்கு அப்புறம் சார் 300 ரூபாய் குடுங்க அப்படினான். அட பாவி ஏண்டானு கேட்டா அவன் சொன்னான் சார் நீங்க விமானத்துல வந்துருக்குறீங்க அதுனால கொடுங்க அப்படினான். அட பாவி டேய் இது எல்லாம் கொஞ்சம் ஓவருடனு சொல்லி அவன் கிட்ட மல்லுகட்டி கடைசியா 250 ரூபாய் குடுத்தேன். அதுக்குள்ளே என்ன ஏர்போர்ட்ல இருந்து கூப்பிட போன எங்க அக்கா அவங்க கார்ல திரும்பி வீட்டுக்கே வந்துடாங்க.
டிஸ்கி: என்னடா இவன் அக்கா கார்ல கூப்பிட வந்துருக்காங்க இவன் ஏன்டா ஆட்டோல வந்தனு யாராவது கேப்பிங்க. அது ஒரு பெரிய கதை அத ஒரு தனி பதிவா போடுறேன்.
இது மாதிரி ஏக பட்டது இருக்குங்க. என் நண்பர்கள்கிட்ட நான் ஆடோல வந்தேன்னு சொன்னா அவங்க மொத கேட்க்கிற கேள்வி இன்னைக்கு எவ்ளோடா அலுதனு கேப்பாங்க.
யாராவது ஒருத்தர் இந்த மாதிரி ஆட்டோ காரங்ககிட்ட இருந்து தப்பிப்பது எப்படின்னு நல்ல ஐடியா குடுதீங்கனா உங்களுக்கு தல நாள்ல ஆம்புள பிள்ளையா புறக்கும்முங்க :-)
Tuesday, August 5, 2008
Saturday, June 14, 2008
கனவிலுமா....
கனவிலுமா....
பந்தலிட்டு
பட்டாடையுடுத்தி
பந்தங்கள் கூடி
பரிஷமிட்டு
மஞ்சல் கயிற்றை
கட்டும் போது
திடிரென்று சத்தம்
எழுந்தால் கனவு
நிஜத்தில் தான்
உன்னுடன் வாழ முடியவில்லை
கனவிலுமா ....
இரவு கவி
பந்தலிட்டு
பட்டாடையுடுத்தி
பந்தங்கள் கூடி
பரிஷமிட்டு
மஞ்சல் கயிற்றை
கட்டும் போது
திடிரென்று சத்தம்
எழுந்தால் கனவு
நிஜத்தில் தான்
உன்னுடன் வாழ முடியவில்லை
கனவிலுமா ....
இரவு கவி
Monday, May 12, 2008
சொல்லாமலேயே செல்கிறேன்
சொல்லாமலேயே செல்கிறேன்
வலது கை எழுதியது
"உன்னை காதலிக்கிறேன்" என்று
இடது கை அதை
அழித்துவிட்டுச் சொன்னது
எங்கே இதை அவள் பார்த்தால்
நம் நட்பும் பிரிந்து விடுமோ
என்ற பயத்தில்
சொல்லாமலேயே செல்கிறேன்
என் காதலை.
வலது கை எழுதியது
"உன்னை காதலிக்கிறேன்" என்று
இடது கை அதை
அழித்துவிட்டுச் சொன்னது
எங்கே இதை அவள் பார்த்தால்
நம் நட்பும் பிரிந்து விடுமோ
என்ற பயத்தில்
சொல்லாமலேயே செல்கிறேன்
என் காதலை.
Monday, May 5, 2008
PIT- மே 2008 - போட்டி
Subscribe to:
Posts (Atom)



















.jpg)

